புதிதாய் பிறந்த பிள்ளையை சிரிக்கிறாய் என் முன்னே
என் நெஞ்சத்து பாரத்தை உன் ஸ்பரிசத்தால் நொறுக்கியவளே
உன் வருகையால், எனக்கே நான் வைத்த வரையறையை உடைத்தவள் நீ
சோதனையை சாதனையாக்கத் தெரிந்தவளே
ஒருபோதும் பாகுபாடு பார்க்க அறியாதவளே
எனக்கே என்னைப் புதுப்பித்து கட்டியவளே
நான் ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் என்னை தாங்கிப் பிடித்தவலே
மீண்டும் மீண்டும் எனக்குள் பிறக்கும் அந்தம் அற்றவளே
நானே என்னுள் உன்னை வளர்க்கும் அன்னையாவேனே
பயத்தை எதிர்த்துப் பிறந்தவளே
வீரம் !!!
மோதித்தான் பார்ப்போமே!!
-இரா ரூபினி